Saturday, March 19, 2011

சோர்வின் உச்சம்,
அனுமதியன்றி அவள் மடியில் அமர்ந்தேன். . .
- நாற்காலி

Wednesday, January 5, 2011

வள்ளுவனும் ஆர் ஆட்சியாளனோ!
- 133 அதிகாரங்கள்

Sunday, December 12, 2010

கிறுக்கல்கள்

என் குட்டிச் செல்லம் வருகைக்கு
என் வீட்டுச் சுவரும் காத்திருக்கு,
நாள் முழுதும் நின்றபடி...

செல்லமே,
உன் பட்டுப் பிஞ்சுக் கைகளோடு
அதன் மேனியெங்கும் விளையாடு,
நாள் முழுதும் வரைந்தபடி...


- பாலா மாமா...
(என் அக்கா குழந்தைக்கு எழுதியது)

Saturday, October 16, 2010

பாலா'வின் நிறம் கருப்பு

என் நிறத்தைக் கண்டு பயமில்லை,
வரன் தேடும் வேளையில்
"போட்டோஷாப்" மட்டும் கையில் இருந்தால்...!

Friday, October 1, 2010

கடல்

ஆணவமில்லாதவளே,
ஆழத்தில் அமைதி காப்பவளே!

ஆசையில்லாதவளே,
ஆனந்த காற்றை தருபவளே!

உயிரில்லாதவளே,
உயிர்களை வாழ வைப்பவளே!

உறக்கமில்லாதவளே,
உரக்க ஒலி தருபவளே!

இரக்கமுடையவளே,
இயற்கையின் வரமே நீயன்றோ...!


-பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதன்படி எழுதியது.