Monday, April 30, 2007

மெய்க் காதல்

உயிரே,

நாட்கள் நகர்ந்தாலும்,
என் பார்வைகள் உன் விழியை விட்டு நகராது...

வாரங்கள் விரைந்தாலும்,
உன் வார்த்தைகள் என் செவியை விட்டு விரையாது...

மாதங்கள் மறைந்தாலும்,
நம் காதல் என் மனதை விட்டு மறையாது...

அந்த 3 நாட்கள்

கண்டேன் உன்னை ஒரு நாள்,
காணத் துடிக்கிறேன் பலநாள்...

நீ என்னைப் பார்க்கும் அந்நாள்,
அதுவே எந்தன் திருநாள்...

நான் உன்னை வெறுக்கும் அந்நாள்,
அதுவே உந்தன் மணநாள்...

காதலர்கள்

கற்பனையாய் நீ,
வார்த்தைகளாய் நான்,
கவிதைகள் ஆவோமா ?

பெண்ணாய் நீ,
ஆணாய் நான்,
காதலர்கள் ஆவோமா ?

நட்பு

*மலரின் சிறப்பு மனம் உள்ளவரை,
நீரின் சிறப்பு தாகம் உள்ளவரை...

*இரவின் சிறப்பு நிலவு உள்ளவரை,
நித்திரையின் சிறப்பு கனவு உள்ளவரை...

*கவிதையின் சிறப்பு கற்பனை உள்ளவரை,
புகழின் சிறப்பு வெற்றி உள்ளவரை...

*அன்னையின் சிறப்பு அன்பு உள்ளவரை,
கடவுளின் சிறப்பு பக்தி உள்ளவரை...

*இந்நாளின் சிறப்பு நாம் உள்ளவரை,
எந்நாளும் சிறப்பு நம் நட்பு உள்ளவரை...