Saturday, October 16, 2010

பாலா'வின் நிறம் கருப்பு

என் நிறத்தைக் கண்டு பயமில்லை,
வரன் தேடும் வேளையில்
"போட்டோஷாப்" மட்டும் கையில் இருந்தால்...!

Friday, October 1, 2010

கடல்

ஆணவமில்லாதவளே,
ஆழத்தில் அமைதி காப்பவளே!

ஆசையில்லாதவளே,
ஆனந்த காற்றை தருபவளே!

உயிரில்லாதவளே,
உயிர்களை வாழ வைப்பவளே!

உறக்கமில்லாதவளே,
உரக்க ஒலி தருபவளே!

இரக்கமுடையவளே,
இயற்கையின் வரமே நீயன்றோ...!


-பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதன்படி எழுதியது.