Friday, October 1, 2010

கடல்

ஆணவமில்லாதவளே,
ஆழத்தில் அமைதி காப்பவளே!

ஆசையில்லாதவளே,
ஆனந்த காற்றை தருபவளே!

உயிரில்லாதவளே,
உயிர்களை வாழ வைப்பவளே!

உறக்கமில்லாதவளே,
உரக்க ஒலி தருபவளே!

இரக்கமுடையவளே,
இயற்கையின் வரமே நீயன்றோ...!


-பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதன்படி எழுதியது.

1 comment:

  1. அருமை நண்பரே அப்பொழுதே இப்படியென்றால் இப்பொழுது எப்படி !?தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete