பெண்ணே,
மழை இரசிக்கும்
உன் கண்கள் கண்டு,
மழையாய் பிறக்க ஆசை கொண்டேன்...
இசை விரும்பும்
உன் செவிகள் கண்டு,
இசையாய் பிறக்க ஆசை கொண்டேன்...
தேன் சுவைக்கும்
உன் நாவைக் கண்டு,
தேனாய் பிறக்க ஆசை கொண்டேன்...
குடை பிடிக்கும்
உன் கரங்கள் கண்டு,
குடையாய் பிறக்க ஆசை கொண்டேன்...
மணல் மிதிக்கும்
உன் பாதங்கள் கண்டு,
மணலாய் பிறக்க ஆசை கொண்டேன்...
எனை சுமக்கும்
உன் இதயம் கண்டு,
உன் மடிமேல் இறக்க ஆசை கொண்டேன்...
cute :)
ReplyDeleteAnnie ku Greeting card kuduka thevailla ;)
ReplyDelete...m, romba advance-aa irupoam la ;)
ReplyDeleteReally superb. Very touching lol:-)
ReplyDelete